Begin typing your search above and press return to search.
திருச்செங்கோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்செங்கோட்டில் நூல் விலை உயர்வைக் கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
திருச்செங்கோடு வட்டார சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார், நூல் விலை உயர்வைக் கண்டித்தும், பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரியும், திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம், பொருளாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் 13 விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்செங்கோடு ஆர்டிஓ இளவரசியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.