Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் 23ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்
நாமக்கல்லில் வரும் 23ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்தார்.
HIGHLIGHTS
இதுகுறித்து நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் துணை மின் நிலையத்தில் வரும் 23ம் தேதி வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் நாமக்கல் நகரம், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஜிஓ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.