/* */

கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியர்கள் ஸ்டிரைக்: தபால் பட்டுவாடாபாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அஞ்சல்துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டது

HIGHLIGHTS

கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் துறை ஊழியர்கள் ஸ்டிரைக்: தபால் பட்டுவாடாபாதிப்பு
X

தபால் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்டத்தில் அஞ்சல்துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டதால், தபால் பட்டுவாடா பணிகள் பாதிக்கப்பட்டது.

தபால்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தி, ஆக.10ம் தேதி, வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, அகில இந்திய தபால் ஊழியர் சங்கங்கள் சார்பில் அழைப்பு விடப்பட்டிருந்தது. இதையொட்டி, நாடு முழுவதும், தபால்துறை ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கிராமப்புற தபால் ஊழியர்களுக்கு இலாகா அந்தஸ்து மற்றும் சமூக பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழிற்சங்கங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த ஊழியர்கள் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில், தபால்துறையில் பணியாற்றும் மொத்தம் 790 அலுவலர்களில், 730 பேர் நேற்று நடந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 60 பேர் மட்டுமே, பணியில் ஈடுபட்டனர். அதனால், தபால் பட்டுவாடா மற்றும் தபால் அலுவலக பணிகளும் பாதிக்கப்பட்டன. தபால் அலுவலகங்கத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Updated On: 10 Aug 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  3. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  4. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  7. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...
  8. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  9. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  10. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்