Begin typing your search above and press return to search.
போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாமக ஆர்ப்பாட்டம்
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி நாமக்கல்லில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி நாமக்கல்லில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாமக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார்.
தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதைத் தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட பாமக செயலாளர் செந்தில், மாநில செயற்குழு உறுப்பினர் பொன் ரமேஷ், மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.