குமாரபாளையம் பகுதியில் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
குமாரபாளையம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
HIGHLIGHTS
குமாரபாளையத்தில் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் மக்கள் நீதி மய்யம் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு தொகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் வசதி இல்லை.
இதன் காரணமாக பல்வேற குடியிருப்பு பகுதிகளிலும், போக்குவரத்து ரோடுகளிலும் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
எனவே குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு தொகுதியில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராமப்புறங்களில் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து உடனடியாக அகற்றவேண்டும் என தெரிவித்துள்ளார்.