எருமப்பட்டி, கா.நா.பட்டி பகுதிகளில் வரும் 21ம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு
எருமப்பட்டி மற்றும் கா.நா.பட்டி பகுதியில் வரும் 21ம் தேதி, வியாழக்கிழமை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

பைல் படம்
எருமப்பட்டி மற்றும் கா.நா.பட்டி பகுதியில் வரும் 21ம் தேதி, வியாழக்கிழமை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கோட்டத்தில், அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக, ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 21ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.
இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபும், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களங்கோம்பை, காவக்காரம்பட்டி, பவித்திரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி மற்றும் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வரும் 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
காளப்பநாய்க்கன்பட்டி:
காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் 21ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்றப்பட உள்ளதால், வருகிற 21ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.