/* */

நாமக்கல் மாவட்டத்தில் வரும் டிச.11ல் தேசிய மக்கள் நீதிமன்றம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற டிச.11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் வரும் டிச.11ல் தேசிய மக்கள் நீதிமன்றம்
X

பைல் படம்.

தேசிய சட்டப் பணிகள் மற்றும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம், ராசிபுரம், திருச்செங்கோடு நீதிமன்றம், பரமத்தி சார்பு நீதிமன்றம் ஆகிய கோர்ட்டுகளில் வருகிற டிச.11-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.

ஏற்கெனவே கோட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளக்கூடியவை, செக் சம்மந்தமான வழக்குகள், வங்கி, கல்விக் கடன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்பப் பிரச்னை தொடர்பான வழக்குகள், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.

மக்கள் நீதிமன்றம் மூலம் விசாரிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது. மேலும், இங்கு முடித்துக் கொள்ளும் வழக்குகளுக்கு செலுத்தப்பட்ட கட்டணம் திருப்பித் தரப்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே, பொதுமக்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்துக்கொள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை அனுகலம் என மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குணசேகரன் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?