/* */

நாமக்கல்லில் சமச்சீர் உரமிடல் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு முகாம்

Namakkal District News -நாமக்கல்லில் சமச்சீர் உரமிடல் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் சமச்சீர் உரமிடல் குறித்த தேசிய அளவிலான  விழிப்புணர்வு முகாம்
X

பைல் படம்.

Namakkal District News - நாமக்கல் அறிவியல் நிலையத்தில், சமச்சீர் உரமிடல் குறித்த தேசிய அளவிலான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை தலைமை வகித்து, சமச்சீர் உரமிடல் மற்றும் பருவகாலங்களுக்கு ஏற்ற வேளாண் காடுகள் அமைப்பதின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். நாமக்கல் வனத்துறை அலுவலர் பிரியங்கா, வனத்துறையில் உள்ள திட்டங்கள், வேளாண் காடுகள் அமைக்க தேவையான நாற்றங்கால் பராமரித்தல், மரக்கன்று நடுதலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், பருவநிலை மாற்றங்களுக்கேற்ற பயிர்; சாகுபடி முறைகள், வேளாண் மற்றும் இதர துறையில் உள்ள விளைபொருட்களில் மதிப்பு கூட்டுதல், கால்நடை கழிவுகளைக் கொண்டு மண்வளத்தை மேம்படுத்துதல். சமச்சீர் உரமிடுதல், உயிர் உரங்கள் மற்றும் நானோ யூரியா தெளிக்கும் முறைகள், உரப்பாசனம் குறித்து விளக்கினர்.

சமச்சீர் உரமிடல் கருத்தை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட மண் வகைகள், உயிர் உரங்கள், இயற்கை எருக்கள், பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்கள், புண்ணாக்கு வகைகள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள், ரசாயன உரங்கள், நுண்ணூட்ட வகைகள் குறித்த கண்காட்சியை விவசாயிகள் பார்வையிட்டனர். மட்கும் கழிவுகளைக் கொண்டு, செறிவூட்டப்பட்ட மட்கும் உரம் தயாரித்தல் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு, மண்வள மற்றும் பாசன நீர் வள அட்டை வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் சத்யா செய்திருந்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jun 2022 7:11 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்