/* */

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்

நாமக்கல்லி பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் கோயில் தேர் திருவிழா கோலாகலம்
X

நாமக்கல் பலபட்டறை மாரியம்மன் வைகாசி தேர்த்திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை தூக்குத்தேரில் வைத்து பக்தர்கள் வீதி வீதியாக தூக்கிச்சென்று பூஜை செய்தனர்.

நாமக்கல்லி அருள்மிகு பலபட்டறை பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாமக்கல் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

நாமக்கல் மெயின் ரோட்டில் பிரசித்திபெற்ற அருள்மிகு பலபட்டறை மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி தேர்த்திருவிழா சுமார் 3 மாத காலம் சிறப்பபாக நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊராடங்கால் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, கடந்த 8ம் தேதி காலை திரளான பொதுமக்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். இரவு கோயில் வளாகத்தில் சக்தி அழைப்பு, கம்பம் நடுதல் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. 9 ஆம் தேதி காலை 6 மணிக்கு பூச்சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 15 ஆம் தேதி மறுகாப்பு பூஜைகள் நடைபெற்றது. கடந்த 22 ஆம் ஞாயிற்றுக்கிழமை வடிசோறு மற்றும் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. இன்று 23ம் தேதி அதிகாலை அபிஷேக ஆராதனை, அம்மன் அலங்காரம், தேரோட்டம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும், மாவிளக்கு ஊர்வலமும் நடைபெற்றது.

நாமக்கல் ச.பே.புதூர் மற்றும் ஆர்.பி. புதூர் பகுதி மக்கள் தூக்குத்தேரில் வைத்து மாரியம்மனை வீதி வீதியாக தூக்கிச்சென்றனர். பொதுமக்கள் ஆங்காங்கு கூடிநின்று மாரியம்மனை வழிபட்டனர். நகரம் முழுவதும் வாழை மரம், தோரனங்கள் கட்டப்பட்டு, வான வேடிக்கைகள், ஒலிபெருக்கிகள், மேள தாளங்கள் முழங்க விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை 24 ஆம் தேதி மாவிளக்கு, பொங்கல் மற்றும் வசந்தோற்சவம் நிகழ்ச்சியும், 25 ஆம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 26 ம் தேதி கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். தொடர்ந்து ஜூலை மாதம் முடிய தினசரி காலை, மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று நகரின் பல்வேறு பகுதிகளில், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பழனிவேலு, உதவி கமிஷனர் ரமேஷ் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

Updated On: 23 May 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்