/* */

நாமக்கல் அரசு மருத்துவமனை: தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

வியாழக்கிழமை நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்

HIGHLIGHTS

நாமக்கல் அரசு மருத்துவமனை: தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
X

நாமக்கல் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்கள்

தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககத்துடன், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் தூய்மைப் பணியாளர்கள் நியமனம் தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் தொழிலாளர்கள் சட்டப்படி பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை (ரூ. 21 ஆயிரத்திற்கு மாற்றாக ரூ. 8 ஆயிரம் மட்டுமே வழங்குகிறது) சரியான முறையில் வழங்குவதில்லை என்றும் சலுகைகளையோ, இதர பணப் பயன்களையோ வழங்காமல் தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரும்பாலான மாவட்டங்களில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி நாமக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 30-ந் தேதி இரவு 25-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்தபடி தினசரி ஊதியமாக ரூ.620 வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. பிடித்தம் செய்ததற்கான கார்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அவர்கள் போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தனர் .

இவர்களின் போராட்டம் நேற்று 7-வது நாளாக நீடித்தது. இவர்களிடம் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், காவல் ஆய்வாளர் சங்கர பாண்டியன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் பேச்சுவார்த்தையின் போது உங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். தற்போது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கூறினர். இதை ஏற்றுக்கொண்டு தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Updated On: 7 Dec 2022 10:17 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    யோக நரசிம்ம பெருமாள் கோயிலில் சித்திரை மாத சுவாதி விழா
  2. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  3. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  4. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  5. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  6. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  7. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  8. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  9. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  10. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு