Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் அக்.4ம் தேதி நுகர்வோர் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மாவட்ட காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற அக்.4ம் தேதி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர்களின் நலன் கருதி, அனைத்து துறையின் முதல்நிலை அலுவலர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் ஆகியோர்களுடன் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வருகிற அக்.4ம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.
கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுவார். பொது விநியோகத்திட்டம் தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை எழுத்து வடிவில், இரண்டு பிரதிகள் அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.