Begin typing your search above and press return to search.
பிரதமர் மோடி பிறந்த நாளில் நாமக்கல் நகர பா.ஜ.க.வினர் ரத்த தானம்
பிரதமர் மோடி பிறந்த நாளில் நாமக்கல் நகர பா.ஜ.க.வினர் ரத்த தானம் செய்தனர்.
HIGHLIGHTS
பாரத பிரதமர் மோடியின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் நகர பா. ஜ.க. சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. நகர பா.ஜ.க. தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவரும், மாவட்ட பொறுப்பாளருமான வி.பி.துரைசாமி முகாமை துவக்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் முகாமில் கலந்துகொண்டு ரத்த தானம் அளித்தனர். மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் ராஜேஷ்குமார், தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட துணைத்தலைவர்கள் மகேஷ்குமார், முத்துக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வடிவேல், சத்யபானு, பிரபு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.