/* */

நாமக்கல், ராசிபுரம் ரயில் நிலையங்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்

Train News Tamil -நாமக்கல், ராசிபுரம் ரயில் நிலையங்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்

HIGHLIGHTS

நாமக்கல், ராசிபுரம் ரயில் நிலையங்களில்  அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்
X

புதுடில்லியில் ரயில்வே கண்காணிப்புக்குழு உறுப்பினர் டி.சி.சர்மாவை, நாமக்கல் எம்.பி சின்ராஜ் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

Train News Tamil - நாமக்கல் மற்றும் ராசிபுரம் ரயில் நிலையங்களில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவேண்டும் என்று ரயில்வே வாரியத்தின் கண்காணிப்புக்குழு உறுப்பினரின் நாமக்கல் எம்பி சின்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாமக்கல் எம்.பி சின்ராஜ், புதுடில்லியில் ரயில்வேறு வாரிய கண்காணிப்புக்குழு உறுப்பினர் டி.சி சர்மாவை நேரில் சந்தித்து அவரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

சேலம் - கரூர் புதிய அகல ரயில் பாதை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சென்னை, பெங்களூர், நாகர்கோவிலில் மற்றும் பாலக்காடு ஆகிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா பரவல் காலத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ரயில்கள் தற்போது, மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

அப்படி இயக்கப்படும் ரயில்கள், தற்போது நாமக்கல் மற்றும் ராசிபுரம் ரயில்நிலையங்களில் ஒரு மார்க்கத்தில் செல்லும் போது நின்றும் மறு மார்க்கத்தில் செல்லும் போது நிற்காமலும் செல்கின்றன. இதனால் சொந்த ஊரில் இருந்து பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் பொதுமக்கள், திரும்பி வரும்போது பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சேலம்-நாமக்கல்-கரூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும், நாமக்கல் மற்றும் ராசிபுரம் ரயில் நிலையங்களில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jun 2022 11:40 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  2. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  3. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  4. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  5. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  6. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  7. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  8. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை
  9. கோவை மாநகர்
    பொய் சொல்லியே பழக்கப்பட்டவர் அண்ணாமலை: சிங்கை ராமச்சந்திரன்...
  10. வீடியோ
    அரைச்ச மாவை அரைக்கும் திமுக ! வச்சி செய்த Annamalai ! #annamalai...