/* */

நாமக்கல்: டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

நாமக்கல்லில் முன் விரோதம் காரணமாக கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வழக்கில், 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்: டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது
X

பைல் படம்

முன் விரோதம் காரணமாக கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வழக்கில், 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கார் டிரைவர் பிரபாகரன் 29. அவரது சகோதரி மகன், நாமக்கல் அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் சரியாக படிக்காததால், பிரபாகரன் அவனை கண்டித்துள்ளார். அப்போது, அங்கிருந்த அவரது நண்பர் மைத்தான் (எ) சுரேந்தர் (27) தட்டிக் கேட்டுள்ளார். அதனால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 9.30 மணிக்கு, செல்லப்பாகாலனியில் உள்ள மாதாகோவில் பின்புறம், பிரபாகரன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த சுரேந்தருக்கும், பிரபாகரனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

தகராறின் போது, மேதர்மாதேவியை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவர் சுரேந்தருக்கு ஆதரவாக பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன், விக்னேஷை கத்தியால் குத்தினார். அதையடுத்து, பிரபாகரன் அருகில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கிக் கொண்டார். தகவல் அறிந்து அங்கு சென்ற சுரேந்தர் மற்றும் சிலர் பிரபாகரனை வெளியே இழுத்து வந்து, கத்தியால் சரமாரியாக குத்தினர். அதில், உடலில் 17 இடங்களில் கத்தி குத்து காயம் ஏற்பட்ட பிரபாகரன் ரத்த வெள்ளத்தில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த நாமக்கல் போலீஸ் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார். தொடர்ந்து, கொலை சம்பவம் தொடர்பாக, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், சுரேந்தர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து, கொலை வழக்கில், சுரேந்தர், அவரது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி (23), நவீன் (22) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 May 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  4. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  6. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி
  7. வேலைவாய்ப்பு
    10ம் வகுப்பு படித்தோருக்கு வேலைவாய்ப்பு
  8. இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
  9. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும்...
  10. தமிழ்நாடு
    முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நல உதவித் திட்டம் பற்றித் தெரியுமா?