/* */

புயல் எச்சரிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புயல் எச்சரிக்கை காரணமாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (9-12-22) விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

புயல் எச்சரிக்கை: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங். (கோப்பு படம்).

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில், சென்னை, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, நாகை மற்றும் நாமக்கல் என 20 மாவட்டங்ளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று, நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு, மாண்டஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், நாளை டிச. 9ம் தேதி மிக கனமழை பெய்யும் எனவும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், கனமழை பெய்யும் எனவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், நாளை (9-12-22) வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என ஆட்சியர் ஸ்ரேயா சிங் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 Dec 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...
  3. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  5. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  6. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  7. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  8. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  9. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  10. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!