நாமகிரிப்பேட்டையில் இளம்பெண்ணை திருமணம் செய்தவர் போக்சோவில் கைது
நாமகிரிப்பேட்டையில், இளம்பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
நாமகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையொட்டி, மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு டாக்டர்கள் தகவல் தெரித்தனர். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது, நாமகிரிப்பேட்டை காலனி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ்குமார் (20) என்பவர் அந்த 17 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி, திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. கர்ப்பம் அடைந்த சிறுமி, உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதும் தெரியவந்தது. இதையொட்டி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு சதீஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.