/* */

நாமகிரிப்பேட்டையில் மாயமான நீட் தேர்வு மாணவி: தேனி மாவட்ட காவல் நிலையத்தில் தஞ்சம்

நாமகிரிப்பேட்டையில் காணாமல் போன நீட் தேர்வு எழுதிய மாணவி, தேனி மாவட்ட காவல் நிலையத்தில் இளைஞருடன் தஞ்சம் அடைந்துள்ளார்.

HIGHLIGHTS

நாமகிரிப்பேட்டையில் மாயமான நீட் தேர்வு மாணவி: தேனி மாவட்ட காவல் நிலையத்தில் தஞ்சம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் தாலுக்கா நாமகிரிப்பேட்டை கிழக்குத் தெருவை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவரது 19 வயது மகள், பிளஸ் 2 முடித்துள்ளார். அவர், நாமக்கல் தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி வகுப்புக்குச் சென்று தேர்வுக்காக படித்து வந்தார்.

கடந்த 12ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை எழுதி உள்ளார். ஆனால், தேர்வை சரியாக எழுதவில்லை என அவர் வீட்டில் கூறியுள்ளார். இந்தநிலையில், சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீட்டுக்கு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள், உறவினர் மற்றும் மகளின் தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதையடுத்து அவர்கள் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவின்படி, போலீசார் தனிப்படை அமைத்து, மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் போலீஸ் ஸ்டேசனில் இளைஞர் ஒருவருடன், நாமகிரிப்பேட்டை மாணவி தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து, நாமக்கல் எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் நிருபர்களிடம் கூறுகையில், மாணவி காணாமல் போனதால், அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பி தேடும் பணியை மேற்கொண்டோம். இந்த நிலையில், தேனி மாவட்டம், உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் திருமணம் செய்து கொண்டாரா என்பது குறித்து இதுவரை தகவல் தெரியவில்லை. தொடர்ந்து விசாரனை நடத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

Updated On: 19 Sep 2021 10:40 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்