/* */

எருமப்பட்டி அருகே சுவரில் துளையிட்டு அடகு கடையில் நகை, பணம் கொள்ளை

எருமப்பட்டி அருகே அடகுக்கடை சுவற்றில் துளையிட்டு நுழைந்த கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

HIGHLIGHTS

எருமப்பட்டி அருகே சுவரில் துளையிட்டு அடகு கடையில் நகை, பணம் கொள்ளை
X

கொள்ளை நடந்த அடகுக்கடை 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது, பவித்திரம் கிராமம். இங்கு அதே பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த சில ஆண்டுகளாக வருடங்களாக நகை அடகு கடை நடத்தி வருகிறார். 7ம் தேதி சனிக்கிழமை அவர் அவசர வேலையாக வெளியூர் சென்று விட்டார். அன்று இரவு வழக்கம் போல் கடையை அதன் மேனேஜர் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை காலை அடகு கடையின் மேல்கூரை துளையிட்டு இருப்பதை வாட்ச்மேன் பார்த்துள்ளார். இது குறித்து கடையின் உரிமையாளர் பாலாஜிக்கும், எருமப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அடகு கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு, அதில் இருந்த சுமார் 13 சவரன் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ரூ. 1.20 லட்சம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. நகை அடகு கடையின் மேல்கூரை சுவரை துளையிட்டு, உள்ளே நுழைந்து, நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

Updated On: 9 May 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  2. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  3. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  4. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  5. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  7. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  8. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  10. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்