Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் சுதந்திர தின விழா கோலாகலம்: தேசியக் கொடியேற்றி வைத்த கலெக்டர்
நாமக்கல்லில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75-வது சுதந்திர தின விழா மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் விழாவில் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
தொடர்ந்து அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.
விழாவில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி, டிஆர்ஓ (பொ) மல்லிகா உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.