Begin typing your search above and press return to search.
"திமுக பிரமுகர்களுக்கு அரசு வேலை" சர்ச்சையான பிரச்சாரம்
திமுக ஆட்சிக்கு வந்தால் திமுக நிர்வாகிகளுக்கு அரசு வேலை - திமுக மாவட்ட பொறுப்பாளர் சர்ச்சை பேச்சு.
HIGHLIGHTS
இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 3 சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
அப்போது, ''வேட்பாளரின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் எனவும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் கண்டிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்சம் 40 பேருக்கு அரசு வேலை வாங்கித் தரப்படும் எனவும், அதோடு கூட்டுறவு சங்கங்களின் பொறுப்புகள் வாங்கி தரப்படும்'' எனவும் பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அரசு வேலையை தங்கள் கட்சிக்காரர்களுக்கு தான் என பேசியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.