சேந்தமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை ரோடுகள்: கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
சேந்தமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள ரோடுகளின் தரம் குறித்து, கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
HIGHLIGHTS
சேந்தமங்கலம் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள, ரோடுகளின் தரம் குறித்து, கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட, சேந்தமங்கலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை உட்கோட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை பணிகள் மற்றும் சிறுபாலங்கள் பணிகளை, சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத்துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த பணியில், சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் புதிதாக போடப்பட்ட சாலையின் தரம் மற்றும் கணத்தின் அளவுகளையும் ஆய்வு செய்தார். மேலும் நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் மலைப்பாதை அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டார். வனத்துறையிடமிருந்து திருத்திய நேர்பாட்டிற்கான அனுமதியை விரைந்து பெற்று பணியினை செயல்படுத்த அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
மேலும், தமிழக அரசின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, சாலை பராமரிப்பு குறித்து நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும், காந்திபுரம் - காரவள்ளி ரோட்ரோரங்களில் பலன் தரும் பழ மரக்கன்றுகளை அவர் நட்டார். நிகழ்ச்சியில், கோட்டப் பொறியாளர் துரை, சேந்தமங்கலம் உதவிக் கோட்டப் பொறியாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவிப் பொறியாளர் பிரனேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.