/* */

நாமக்கல்லில் 21-ம் தேதி இயற்கை வேளாண்மை குறித்து இலவச பயிற்சி

நாமக்கல்லில் வருகிற 21-ம் தேதி விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் 21-ம் தேதி இயற்கை வேளாண்மை குறித்து இலவச பயிற்சி
X

பைல் படம்.

நாமக்கல் வேளாண் அறிவில் நிலைய (கே.வி.கே) தலைவர் டாக்டர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வருகிற 21ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இயற்கை வேளாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சியில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம், இயற்கை வேளாண்மை வழிமுறைகள், பயிர் சுழற்சி முறைகள், பயிர்களை தேர்வுசெய்தல், கலப்பு மற்றும் ஊடுபயிர் சாகுபடி, விதைநேர்த்திமுறைகள், இயற்கைமுறையில் மண்வளமேம்பாட்டு முறைகள், மண்ணில் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையைஅதிகப்படுத்துதல், பண்ணையில் கிடைக்கக்கூடிய கழிவுகளைக்கொண்டு இயற்கைஉரம் தயாரிக்கும் முறைகள், மண்புழு உர உற்பத்திமுறைகள், இயற்கை வேளாண்மை முறையில் பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்பாடு, பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், அமிர்தகரைசல், மீன் அமிலம் யாரிக்கும் செயல்முறைவிளக்கம் மற்றும் இயற்கைவேளாண்மைக்கேற்ற சான்றளிப்பு முறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்படும். இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

விருப்பமுள்ளோர் பயிற்சி மையத்திற்கு நேரில் வந்தோ, அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை தொடர்புகொண்டோ முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 July 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  2. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  3. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!
  4. செய்யாறு
    கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது
  5. வணிகம்
    புதிய நிதியாண்டில் முக்கிய நிதி மாற்றங்கள் என்ன தெரியுமா..?
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து
  8. கும்மிடிப்பூண்டி
    ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...
  9. தென்காசி
    அதிமுகவிற்கு பொதுவுடமை நாம் தமிழர் கட்சி தலைவர் சஞ்சீவிநாதன் ஆதரவு
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி