/* */

நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து நாளை நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம்

நாமக்கல்லில் நாளை 19ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து நாளை நாமக்கல்லில் இலவச பயிற்சி முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள, வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) நாட்டுக்கோழி வளர்ப்பிற்கேற்ற தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இலவச பயிற்சி நாளை 19ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இப்பயிற்சியில் புறக்கடை மற்றும் தீவிர முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு தொழில் நுட்பங்கள், நாட்டுக்கோழி இனங்கள், நவீன கோழி வளர்ப்பு முறைகள், தீவன அளவுகள், குஞ்சு பொரிக்கும் விதம், இன்குபேட்டர்களின் பயன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

மேலும், நாட்டுக்கோழிகளைத் தாக்கும் நோய்கள், அறிகுறிகள் அவற்றை தடுக்கும் முறைகள் மற்றும் நாட்டுக்கோழிகளை பராமரிக்கும் முறைகள் குறித்தும் விரிவாக பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர் மற்றும் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ, 04286 266345, 266650 என்ற போன் மூலமாகவோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என்று பயிற்சி மைய தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.

Updated On: 18 May 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காற்றின் அலைவரிசையில் கடவுளோடு பேசுவோம்..!
  2. தமிழ்நாடு
    சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
  3. திருமங்கலம்
    சோழவந்தானில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் : முன்னாள் அமைச்சர்...
  4. கோயம்புத்தூர்
    தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு. கோவையில்...
  5. தமிழ்நாடு
    எடைக்குறைப்பு சிகிச்சையில் இளைஞர் மரணம்; மருத்துவக் குழு விசாரணை...
  6. தர்மபுரி
    கடும் வெயிலால் கருகும் காபி மற்றும் மிளகு செடிகள்: கிராம மக்கள் வேதனை
  7. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  9. தமிழ்நாடு
    திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்
  10. தொண்டாமுத்தூர்
    நொய்யல் ஆற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாக விவசாயிகள்...