/* */

வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள்: எம்எல்ஏ வழங்கல்

வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் நாமக்கல்லில் விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை எம்எல்ஏ வழங்கினார்.

HIGHLIGHTS

வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள்: எம்எல்ஏ வழங்கல்
X

வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகளை நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தை தமிழக முதல்வர் சென்னையில் துவக்கி வைத்துள்ளார்.

இதையொட்டி நாமக்கல் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு தேக்கு, பெருநெல்லி, மகாகனி, புளி, நாவல், அசோக மரம், கடுக்காய், குமிழ், ஈட்டி ஆகிய மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிப் பேசினார். நாமக்கல் ஒன்றிய அட்மா தலைவர் பழனிவேல், ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி, கண்ணன், நலங்கிளி, சரஸ்வதி, பஞ்சாயத்து தலைவர் சரஸ்வதி, வேளாண்மை துணை இயக்குனர் ஜெகதீசன், வேளாண்மை உதவி இயக்குனர் அன்புச்செல்வி, வேளாண் அலுவலர் சித்ரா, துணை தோட்டக்கலை அலுவலர் செல்வமணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Nov 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!