/* */

முன்னாள் அமைச்சர் சரோஜா தனது கணவருடன் மாவட்ட குற்றப்பிரிவில் கையொப்பம்

மோசடி வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையொப்பமிட்டனர்.

HIGHLIGHTS

முன்னாள் அமைச்சர் சரோஜா தனது கணவருடன் மாவட்ட குற்றப்பிரிவில் கையொப்பம்
X

அரசு வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில், நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள, அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையொப்பமிட்டனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க மேலாளர் குணசீலன் (65). இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் மீது ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் பண மோசடி புகார் அளித்தார்.

புகாரில் சத்துணவு திட்டத்துறையில் வேலை வாங்கித் தருவதாக 15 பேர் தன்னிடம் ரூ. 76.50 லட்சம் பணம் அளித்தாகவும், அந்த பணத்தை பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் சரோஜா, வேலை வாங்கித்தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த புகார் தொடர்பாக நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகிய இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சனும் கடந்த சில தினங்களுக்கு முன் ராசிபுரம் ஜேஎம் கோர்ட்டில் சரணடைந்து நிபந்தனை ஜாமீன் பெற்றனர். அப்போது இருவரும் மறு உத்திரவு வரும் வரை வாரந்தோறும் சனிக்கிழமை நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என உத்திரவிட்டப்பட்டது.

இதையொட்டி, இன்று சனிக்கிழமை முன்னாள் அமைச்சர் சரோஜா, அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோர், மாவட்ட எஸ்.பி ஆபீஸ் வளாகத்தில் உள்ள, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு வருகை தந்து கையொப்பமிட்டு திரும்பிச் சென்றனர்.

Updated On: 23 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தலைக்கேறிய கஞ்சா போதை வாகன ஓட்டி மீது தாக்குதல் !#drugaddiction...
  2. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் தேரோட்டம்
  3. தொழில்நுட்பம்
    இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை ஒப்பந்த எதிர்ப்பு :ஊழியர்கள் பணி
  4. காஞ்சிபுரம்
    ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன்...
  5. நாமக்கல்
    பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: கோழிப்பண்ணைகளில் ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    ஆதி திராவிடர், பழங்குயினர் மாணவர்களுக்கான ‘என் கல்லூரிக் கனவு’...
  7. நாமக்கல்
    முதியோருக்கு சேவை குறைபாடு: எஸ்பிஐ வங்கி ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க...
  8. மதுரை மாநகர்
    மதுரை கோயில்களில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே கோயில்களில் மெகா விருந்து
  10. இராஜபாளையம்
    காரியாபட்டி அருகே அய்யனார் ஆலய மகா கும்பாபிஷேகம்