/* */

முட்டை விலை மீண்டும் 25 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ. 4.15

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மீண்டும் 25 பைசா உயர்ந்து, ஒரு முட்டையின் விலை ரூ.4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.

HIGHLIGHTS

முட்டை விலை மீண்டும் 25 பைசா உயர்வு: ஒரு முட்டை விலை ரூ. 4.15
X

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ.3.90 ஆக இருந்த முட்டை விலை, 25 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முட்டை வியாபாரிகளுக்கு வழங்கக்கூடிய மைனஸ் விலை, ஒரு முட்டைக்கு 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 3.85 கிடைக்கும். கடந்த 12ம் தேதி ரூ.3.65 பைசாவாக இருந்த ஒரு முட்டையின் விலை 25 பைசா உயர்ந்து ரூ.3.90 ஆனது. 2 நாட்களில் மீண்டும் 25 பைசா உயர்ந்து ரூ.4.15 ஆனதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை 440, பர்வாலா 382, பெங்களூர் 415, டெல்லி 400, ஹைதராபாத் 385, மும்பை 425, மைசூர் 410, விஜயவாடா 385, ஹொஸ்பேட் 375, கொல்கத்தா 470.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 134 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.80 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 14 May 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!