/* */

நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம்

நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாம்
X

நாமக்கல்லில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி முகாமில், சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பேசினார்.

தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி முகாம் நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சங்க மாநில பொதுச்செயலாளர் கிருபானந்தன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்துப் பேசினார்.

அப்போது, எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளராக விளங்க எந்த படிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கிப் பேசினார். நிகழ்ச்சியில், நேரடி நியமனம் பெற்ற முதுகலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமு கலந்து கொண்டு பேசினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

முடிவில் நாமக்கல் மாவட்ட செயலாளர் சிவநாதன், கார்த்திகேயன், தேவராஜ், செல்வகுமாரி, செல்வராஜ், புவனேஸ்வரி, பார்த்தசாரதி,சக்திவேல், கோபால், வித்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 29 May 2022 1:30 PM GMT

Related News