/* */

நாமக்கல்லுக்கு வருகை தந்த ராஜேஷ்குமார் எம்.பிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

நாமக்கலுக்கு வருகை தந்த, ராஜ்சயபா எம்.பி. பதவிக்கான திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் ராஜேஷ்குமாருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லுக்கு வருகை தந்த ராஜேஷ்குமார் எம்.பிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு
X

ராஜ்சயசபா எம்.பி தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிடும் ராஜேஷ்குமார், நாமக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள, ராஜேஷ்குமார் தற்போது ராஜ்சயபா எம்.பியாக பணியாற்றி வருகிறார். அவரது பதவி காலம் அடுத்த மதம் முடிவடைகிறது. ராஜ்சயபா எம்.பிக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறுகிது. ராஜேஷ்குமார் மீண்டும் திமுக சார்பில் ராஜ்சயபா எம்.பி பதவிக்கு மீண்டும் போட்டியிட, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் வாய்ப்பளித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் இருந்து ராஜேஷ்குமார் இன்று நாமக்கல் வந்தார். நாமக்கல் மணிக்கூண்டு அருகில் திமுகவினர் அவருக்கு தாரை தப்பட்டை முழங்க, பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தொடர்ந்து மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, முன்னாள் எம்.பி. சுந்தரம், திமுக மாநில நிர்வாகிகள் மணிமாறன், ராணி, நகர பொறுப்பாளர்கள் சிவகுமார், ராணா ஆனந்த், பூபதி, ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியம், அசோக்குமார், நவலடி, பழனிவேல் மற்றும் நகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட திரளானவர்கள் அவருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Updated On: 18 May 2022 7:45 AM GMT

Related News