Begin typing your search above and press return to search.
மல்லசமுத்திரத்தில் வரும் 27ம் தேதி, மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்
நாமக்கல் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வருகிற 27ம் தேதி மல்லசமுத்திரத்தில் நடைபெறுகிறது.
HIGHLIGHTS
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், மாவட்ட இயக்க மேலாண் அலகு சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 27ம் தேதி, நாமக்கல் மாவட்ட அளவில் மல்லசமுத்திரம் மகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெறுகிறது.
படித்து வேலைவாய்ப்பற்ற இருபாலருக்கும், பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம், வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த முகாம் நடைபெறுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், நாமக்கல் மாவட்டத்தில், படித்து வேலைவாய்ப்பற்ற இருபாலரும், கலந்து கொண்டு தங்களுக்கு விருப்பமான, சரியான நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று பயனடையுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.