Begin typing your search above and press return to search.
பாஜக சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டை வழங்கல்
பாஜக சார்பில் பொதுமக்களுக்கு மத்திய அரசின் ஆயுஷ்மானர் பாரத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
நாமக்கல் நகர பாஜக சார்பில், கொண்டிசெட்டிப்பட்டியில் இயங்கி வரும், மக்கள் சேவை மையத்தில், மத்திய அரசின் ஆயுஷ் மான் பாரத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நகர தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, நகர பொதுச்செயலாளர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக மாவட்ட பொறுப்பாளரும், மாநில துணைத்தலைவருமான வி.பி.துரைசாமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் 400 குடும்பத்தினருக்கு, மத்தியஅரசின் மருத்துவ இன்சூரன்ஸ் அடையாள அட்டைகளை வழங்கினார். 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக தேசியக் கொடிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திரளான பாஜக நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.