/* */

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் பூசாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி, கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் பூசாரிகள் பேரவை ஆர்ப்பாட்டம்
X

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் பார்க் ரோட்டில் மாவட்ட பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு கிராம கோயில் பூசாரிகள் பேரவை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய வகையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு, கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை நிறுவனர் வேதாந்தம், கிராம கோயில் பூசாரிகள் பேரவை மாநிலத் தலைவர் கோபால்ஜி ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதையொட்டி, நாமக்கல் பார்க் ரோட்டில், கிராம கோயில் பூசாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம கோயில் பூசாரிகள் பேரவை, மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு, கிராம கோயில் பூசாரிகளுக்கு வழங்கப்படும் மாத சம்பளத்தை நிபந்தனையின்றி, ரூ. 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

முடங்கிக் கிடக்கும் பூசாரிகள் நலவாரியத்தை சீர்படுத்தி விரைவாக செயல்படுத்த வேண்டும் . அனைத்து கிராம கோயில்களுக்கும் கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூசாரிகள் மறைவிற்கு பின் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கணேசன், பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 March 2023 10:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்: செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்...
  2. ஆன்மீகம்
    புனித சனிக்கிழமையின் முக்கியத்துவம் தெரியுமா..?
  3. ஈரோடு
    ஸ்டாலின் வருகையையொட்டி ஈரோட்டில் நாளை மறுநாள் வரை ட்ரோன்கள் பறக்க
  4. திருவள்ளூர்
    வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...
  5. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் திருப்பூர் தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை திறப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின்...
  7. குமாரபாளையம்
    பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...
  8. நாமக்கல்
    புனிதவெள்ளியை முன்னிட்டு கிறிஸ்துவ தேவலாயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    திருவண்ணாமலை மாவட்டத்தில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை
  10. ஆன்மீகம்
    87 வயதிலும் இறைகடன் செய்த போப் ஆண்டவர்..!