/* */

சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல் ஆர்ப்பாட்டம்

namakkal news, namakkal news today- மோகனூர் அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வருகிற ஜூன் 12ம் தேதி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

HIGHLIGHTS

சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதை கண்டித்து, நாமக்கல்லில் ஜூன் 12ல் ஆர்ப்பாட்டம்
X

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் ஜூன் 12ல் ஆர்ப்பாட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு (கோப்பு படம்)

namakkal news, namakkal news today- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியில் நடைபெற்றது.

மாநில தலைவர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர்கள் லகுமய்யா, துளசிமணி, சிபிஐ மாவட்ட செயலாளர் அன்புமணி, நாமக்கல் மாவட்ட விவசாய சங்க செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க, தமிழக அரசு விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் தவறான நடவடிக்கையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். விவசாயிகளை வஞ்சிக்கும் தமிழக அரசை கண்டித்து வருகிற 12ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகராட்சி கழிவு நீர் தூசூர் ஏரி யில் கலப்பதால் கழிவு நீர் செல்லக்கூடிய வீசானம், வேட்டாம்பாடி, சிவியாம்பாளையம், லக்கமநாயக்கன்பட்டி, தூசூர் ஆகிய பகுதிகளில் விளைநிலங்கள், நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்டுகிறது. இவற்றை போக்கிட மாவட்ட நிர்வாகம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கழிவுநீரை சுத்தப்படுத்தி அனுப்ப வேண்டும் என மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் 1981ஆம் ஆண்டு கூட்டுறவு துறையில், ஆவின் பால் நிறுவனம் துவக்கப்பட்டது. இந்த நிறுவனம் தமிழக விவசாயிகளிடம் பாலை கொள்முதலை செய்து, அதன் மூலம் மக்களுக்கு 50 விதமான பால் பொருட்களையும், பால் விற்பனையையும் வெற்றிகரமாக செய்துவருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பால் கொள்முதல் செய்ய குஜராத் அமுல் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இது ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை பாதிக்கும். தற்போது அமுல் நிறுவனம் பாலினை கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது, மாநில அரசால் உருவாக்கப்பட்ட ஆவின் நிறுவனத்திற்கு எதிராநடவடிக்கையாகும். எனவே தமிழகத்தில் பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனத்திற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திரளான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 31 May 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!