/* */

இராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க கோரிக்கை

இராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

இராசிபுரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் அமைக்க கோரிக்கை
X

தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் ரகுநாதன் கோரிக்கை குறித்து விளக்கினார். கூட்டத்தில், திருச்செங்கோடு தாலுக்காவில் உள்ள மல்லசமுத்திரம், வையப்பமலை குறு வட்டங்கள் மற்றும் ராசிபுரம் தாலுக்காவில் உள்ள வெண்ணந்தூர் குறு வட்டம் ஆகியவற்றை உள்ளடக்கி, மல்லசமுத்திரத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய தாலுக்கா அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில், புதிய தாலுக்காக்கள் பிரிக்கப்பட்டு, தற்போது 8 தாலுக்கா உள்ளன. இந்த நிலையில் 2 வருவாய் கோட்டங்கள் மட்டுமே உள்ளன. எனவே, பொதுமக்களின் நன்மை கருதியும், நிர்வாக வசதிக்காகவும், ராசிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய வருவாய் கோட்டம் உருவாக்க வேண்டும் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வருவாய் நிர்வாகத்தில், கிராமத்தின் அடிப்படை பணியிடமாக உள்ள கிராம உதவியாளர் காலி பணியிடங்கள், 8 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. நிர்வாக நலன் கருதி, கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சங்க மாவட்ட துணை தலைவர்கள் அரவிந்தன், அம்ஜத், பொருளாளர் சரவணகுமார் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Jan 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி