இராசிபுரம் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.65 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
ராசிபுரம் கூட்டுறவு சங்கத்தில், ரூ.65 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
HIGHLIGHTS

பைல் படம்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வேளாண் உற்பத்தியாளர்கள் (டிசிஎம்எஸ்) கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கப்பட்டி, குருசாமிபாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள், பகிரங்க ஏலத்தில் கலந்து கொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.
ஏலத்தில் 1,855 பருத்தி மூட்டைகள் ரூ.65 லட்சத்திற்கு ஏலம் போனது. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.9,860க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.11,319க்கும், சுரபி ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.9,972 முதல் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.11,359க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.2,620 முதல் அதிகபட்சமாக ரூ.6,058க்கும் ஏலம் போனது.