/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 505 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 15ஆம் கட்ட கெரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 505 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 15ஆம் கட்ட கெரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 13,84,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை தடுப்பூசி 10,69,504 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 6,65,033 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற 14 கட்ட தடுப்பூசி முகாம்களில் 5,50,043 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இன்று 18ம் தேதி சனிக்கிழமை 15ஆம் கட்ட தடுப்பூசி முகாம் 505 இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாம் பணிகளில் சுமார் 4 ஆயிரம் பேர் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒருதவணை தடுப்பூசி கூடபோடாதவர்களும், முதலாம் தவணை செலுத்தி முடித்து இரண்டாம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Dec 2021 3:00 AM GMT

Related News