/* */

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி: 22ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிப்பு

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி: 22ம் தேதி வரை விண்ணப்பிக்க அறிவிப்பு
X

கூட்டுறவு மேலாண்மை பயிற்சிக்கான விண்ணப்பம் (பைல் படம)

இதுகுறித்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சிக்கு வரும் 18ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வந்து சேர 22ம் தேதி மாலை 5.30 மணி கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் மற்றும் 10+2 கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். 1.8.2022 அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சிக்கான மொத்த கட்டணம் ரூ.18,850/-ஆகும்.


பயிற்சிக்கான விண்ணப்பத்தினை நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள, கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் வந்து ரூ.100/- ரொக்கமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கூரியர் அல்லது பதிவு தபால் மூலம் மட்டும் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Aug 2022 10:23 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    எளிய குறள் அறிவோம் எல்லோரும் வாங்க..!
  2. பூந்தமல்லி
    காங்கிரஸ் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
  3. தமிழ்நாடு
    தபால் ஒட்டுகள் இன்றுடன் நிறைவு..!
  4. நாமக்கல்
    மக்களுக்காக இலவச போர்வெல் அமைத்து கொடுப்பேன் : அதிமுக வேட்பாளர்...
  5. ஆன்மீகம்
    வராக அவதாரத்தின் அற்புதத்தை பார்க்கலாம்..!
  6. சினிமா
    சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சில பிரபல நடிகைகள்
  7. அரசியல்
    கோவையில் நடந்த பிரஸ்மீட்: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை..!
  8. அரசியல்
    எம்ஜிஆர் கனவை நிறைவேற்ற அம்பையில் மோடி உறுதி..!
  9. லைஃப்ஸ்டைல்
    மறக்க முடியாத மை: மாற்ற முடியாத பச்சை குத்தல்களுக்கான உங்கள்
  10. வீடியோ
    🔴LIVE : பெரம்பலூரில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா | Roadshow |...