/* */

நர்சரி பண்ணைக்கு விதை விற்பனை உரிமம் பெறுவது கட்டாயம்: துணை இயக்குநர்

நர்சரி பண்ணை வைத்திருப்பவர்கள் விதை விற்பனை உரிமம் பெறுவது கட்டாயம் என விதை ஆய்வு துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நர்சரி பண்ணைக்கு விதை விற்பனை உரிமம் பெறுவது கட்டாயம்: துணை இயக்குநர்
X

பைல் படம்.

இது குறித்து சேலம் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், விதைகளை அதற்கான லைசென்ஸ் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.

விதை கொள்முதல் விபரங்களை, இருப்பு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு, நாற்றுகளை விற்பனை செய்யும்போது, பயிர் ரகம், நாற்றங்கால் எண்ணிக்கை, விற்பனை விலை ஆகிய விபரங்களுடன் விவசாயிகளின் கையொப்பத்துடன் ரசீது வழங்க வேண்டும்.

பழச்செடிகள் மற்றும் தென்னங்கன்றுகள் உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி விற்பனை செய்யும்போது, அவற்றின் ரகம், விலை குறிப்பிட்டு ரசீது வழங்கி இருப்பு பதிவேட்டில் பதிவுசெய்ய வேண்டும்.

நர்சரி முன்பு, நர்சரி பெயர் பலகையும், நாற்றுகள் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் அடங்கிய இருப்பு பலகையும் வைக்க வேண்டும். அவற்றை பின்பற்றாமல் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய லைசென்ஸ் பெற விரும்புபவர்கள் சேலம், கலெக்டர் அலுவலக வளாகத்தில்த்தில் உள்ள விதை ஆய்வு துணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பித்து, லைசென்ஸ் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Sep 2021 10:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  2. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  3. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  4. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  5. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  6. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  8. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  9. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  10. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!