/* */

காதலியை கழுத்து நெரித்துக் கொலை செய்த சட்டீஸ்கர் மாநில சிறுவன் கைது

நாமக்கல் அருகே காதலியை கழுத்து நெரித்துக் கொலை செய்த சட்டீஸ்கர் மாநில சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

காதலியை கழுத்து நெரித்துக் கொலை செய்த சட்டீஸ்கர் மாநில சிறுவன் கைது
X

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த நொச்சிப்பட்டியில், தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு, சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். அங்கு வேலை செய்து வரும் தனது நண்பரிடம் வேலை கேட்டு, சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சோமனுபோயன் (17) என்பவர் தனது காதலி 16வயது சிறுமியுடன் வந்தார். நண்பர், கோழிப்பண்ணை உரிமையாளரிடம் அழைத்துச் சென்று வேலை கேட்டுள்ளார். அதற்கு குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை எனக்கூறி, கோழிப்பண்ணை உரிமையாளர் இருவரையும் திருப்பி அனுப்பிவிட்டார்.

இதற்கிடையில், இன்று காலை 8 மணிக்கு, சோமனுபோயன், வேறொரு பெண்ணுடன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருப்பதை, அவரது காதலி பார்த்துள்ளார். அதனால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த சோமனுபோயன், தனது காதலி போதிமாண்டவியின் கழுத்தில், துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தார். தகவல் அறிந்த மோகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காதலியை கொலை செய்த சோமனுபோயனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 May 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  2. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  3. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  4. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  5. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  7. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...
  8. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மதியம் 1 மணிக்கு 46.31 சதவீதம்...
  9. லைஃப்ஸ்டைல்
    உங்களை அடையாளப்படுத்த உங்கள் நடத்தையே காரணி..!
  10. லைஃப்ஸ்டைல்
    குடும்ப குதூகலத்தின் புன்னகைப்பூக்கள், உறவுகள்..!