/* */

நாமக்கல்லில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு செஸ் போட்டி

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வுக்காக, நாமக்கல்லில் செஸ் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு செஸ் போட்டி
X

நாமக்கல்லில் நடைபெற்ற செஸ் ஓலிம்பியாட் விழிப்புணர்வு செஸ் போட்டியை கலெக்டர் ஸ்ரேயாசிங் துவக்கி வைத்தார்.

முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னை மகாபலிபுரத்தில் வருகிற 28ம் தேதி துவங்கி ஆக.10 வரை நடைபெறுகிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் உ த்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைத்து பிரிவினருக்கான செஸ் போட்டி இன்று நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து போட்டியை துவக்கி வைத்தார்.

அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 180 -க்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்துகொண்டனர். போட்டிகான ஏற்பாடுகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட செஸ் விளையாட்டு சங்கத்தினர் செய்திருந்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, பிஆர்ஓ சீனிவாசன், மாவட்ட செஸ் விளையாட்டு சங்க செயலாளர் ஞானசேகர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 19 July 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி