Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் மகாத்மா காந்தி சிலை அமைக்க பூமி பூஜை
நாமக்கல்லில் மகாத்மா காந்தி சிலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் ச.பே.புதூரில் உள்ள செலம்ப கவுண்டர் பூங்கா வளாகத்தில் காந்தி சிலை அமைக்கப்படுகிறது. மகாத்மா காந்தி சிலை அமைப்புக்குழு சார்பில், சிலை அமையவுள்ள இடத்தில், பூமி பூஜை நடைபெற்றது. சிலை அமைப்புக்குழு தலைவர் பாமா ரங்கநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
பூமி பூஜை செய்து சிலை அமைப்பு பணி துவக்கப்பட்டது. சிலை அமைப்புக்குழு செயலாளர் சோழாஸ் ஏகாம்பரம், பொருளாளர் சீனிவாசன் மற்றும் நாமக்கல் கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன், காமராஜ் தொண்டர் இளங்கோ, ச.பே.புதூர் தர்மகர்த்தா மணி, நல்லிபாளையம் ஜவஹர் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விரைவில் புதுடில்லியில் உள்ளதைப் போல், மகாத்மா காந்தி அமர்ந்த நிலையில் உள்ள வெங்கல சிலை அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடத்தப்படும் என்று சிலை அமைப்புக்குழுவினர் தெரிவித்தனர்.