பருவமழை காலங்களில் மின்சாதனங்களை கவனமாக கையாள மின்வாரியம் வேண்டுகேள்
பருவமழை துவங்க உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
HIGHLIGHTS
பருவமழை துவங்க உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் (பொ) பரிமளா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால், நாமக்கல் மின் பகிர்மான வட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்தடை மற்றும் சேதாரங்களை உடனுக்குடர் சரிசெய்ய 18 சிறப்பு பணியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மின்கம்பங்கள் மற்றும் தளவாட பொருட்கள் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மழையின் போது மின் உபகரணங்களை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது தெரியவந்தால், மின் கம்பிகளின் அருகில் செல்லாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மின்தடை மற்றும் அவசர புகார்களுக்கு செல்போன் எண்: 94987 94987 மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.