கோர்ட் விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பிடிவாரண்ட்
நாமக்கல் மாவட்டத்தில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெஸ்க்டர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாமக்கல் மாவட்டத்தில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 2 போலீஸ் இன்ஸ்பெஸ்க்டர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில், கடந்த 2020-ம் ஆண்டு, இன்ஸ்பெக்டராக சதீஷ்குமார் பணியாற்றினார். அப்போது 2020 முதல் 2022-ம் ஆண்டு வரை காலகட்டத்தில நடந்த 6 சாலை விபத்து வழக்குகள் தொடர்பாக அவர் சேந்தமங்கலம் கோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணையில், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதைத்தொடர்ந்து சேந்தமங்கலம் குற்றவியல் கோர்ட்டு நீதிபதி ஹரிஹரன், வழக்குகளில் ஆஜராகாமல் இருந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமாரை வருகிற 8-ந் தேதி கோர்ட்டில் விசாரணைக்கு ஆஜர்படுத்த பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். தற்போது சதீஷ்குமார் சிவகங்கை மாவட்ட தெற்கு கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வளவன். அப்போது அங்கு நடந்த ஒரு வழக்கில், சேந்தமங்கலம் கோர்ட்டில் நடைபெறும் விசாரøணியல், இதுவரை ஆஜராகாமல் இருந்து வந்தார். இதை தொடர்ந்து அவர் நாளை 6ம் தேதி செவ்வாய்க்கிழமை சேந்தமங்கலம் கோர்ட்டில் ஆஜராக, நீதிபதி பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.