/* */

நாமக்கல்லில் வரும் 20ம் தேதி அரங்கநாதர் புதிய திருத்தேர் வெள்ளோட்ட விழா

நாமக்கல் அரங்கநாதர் கோயில் புதிய திருத்தேர் வெள்ளோட்டம் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 20ம் தேதி அரங்கநாதர் புதிய திருத்தேர் வெள்ளோட்ட விழா
X

வெள்ளோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ள நாமக்கல் ஸ்ரீ அரங்கநாதர் திருத்தேர்.

நாமக்கல் மலையின் கிழக்குப்புறத்தில், மெயின் ரோடு பகுதியில் ஸ்ரீ அரங்கநாதர் கோயில் குடைவறைக் கோயிலாக அமைந்துள்ளது. இங்கு கார்கோக்கடகன் என் பாம்பின் மீது மூலவர் அரங்காநதர் அனந்த சயன நிலையில் உள்ள சிலை மலையைக்குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் பங்குனி மாதத்தில் ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ அரங்கநாதர், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகிய முப்பெரும் தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். 3 தேரும் உருவாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனால் பழுதடைந்த நிலையில் இருந்த நரசிம்மர், ஆஞ்சநேயர் கோயில் தேர் கள் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்டு, இந்த ஆண்டு நடைபெற்ற பங்குனி விழாவின் போது தேரோட்டம் நடைபெற்றது.

பழுதடைந்து உடைந்து விழும் நிலையில் இருந்த அரங்கநாதர் கோயில் தேரை, இந்து சமய அறநிலையத்துறை மூலம், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில்தேர் புதுப் பிக்கும் பணி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. திருவண்ணாமலையைச் சேர்ந்த ஸ்தபதி தண்டபாணி தலைமையில், 45 மரச்சிற்பக் கலைஞர்கள் புதிய தேரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த ஆண்டு பங்குனி தேர்த்திருவிழாவின்போது தேர் அமைக்கும் பணி நிறைவடையாததால் அரங்கநாதர் தேர் ஓடவில்லை.

தற்போது புதிய தேர் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, வரும் 20ம் தேதி வெள்ளிக்கிழமை, ஸ்ரீ அரங்காநதர் உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் தேரில் எழுந்தருளி வீதியுலா வரும் வகையில் வெள்ளோட் டம் நடைபெறும். அன்று காலை 6.30 மணிக்கு நடைபெறும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், அரசு முதன்மை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் கண்ணன், கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி, எம்பிக்கள் ராஜேஷ்குமார், சின்ராஜ், எம்எல்ஏ ராமலிங்கம், நகராட்சித்தலைவர் கலாநிதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைக்கின்றனர். தொடர்ந்து முக்கிய வீதிகளின் வழியாக தேர் வெள்ளோட்டம் நடைபெறும். கோயில் துணை கமிஷனர் ரமேஷ், தக்கார் அன்னக்கொடி ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Updated On: 15 May 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மக்களவை தேர்தல் பாதுகாப்பு பணியில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர்
  2. இந்தியா
    வாக்காளர்களுக்கு விவிபாட் சீட்டு தருவது ஆபத்து: உச்சநீதிமன்றத்தில் ...
  3. அரசியல்
    அண்ணாமலை எனக்கு பெரும் சொத்து: பிரதமர் மோடி கடிதம்
  4. ஈரோடு
    நாளை வாக்குப்பதிவு: ஈரோடு மாவட்ட எல்லையில் தீவிர வாகன சோதனை
  5. லைஃப்ஸ்டைல்
    யானைக்கு ஏன் திடீரென மதம் பிடிக்கிறது? - காரணங்களை தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    இடுப்பில் அரைஞான் கயிறு கட்டுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா?
  7. திருப்பரங்குன்றம்
    மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
  8. கும்மிடிப்பூண்டி
    லாரியில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்
  9. லைஃப்ஸ்டைல்
    தூங்கி எழுந்ததும் சிலருக்கு முகத்தில் வீக்கம் - நோயின் அறிகுறியா?
  10. குமாரபாளையம்
    தேர்தல் நடைமுறையால், வழக்கறிஞர்கள் சங்க ஆர்பாட்டம் ஒத்தி வைப்பு!