/* */

கொல்லிமலையில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மையம் அமைக்க நடவடிக்கை

கொல்லிமலையில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மையம் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

கொல்லிமலையில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மையம் அமைக்க நடவடிக்கை
X

கொல்லிமலைக்குச் செல்லும் குறுகலான 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை.

கொல்லிமலையில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாகச சுற்றுலா மையம் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் இயற்கை சுற்றுச்சூழல் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. கடல் மட்டத்தில் இருந்து 1,330 மீட்டர் உயரத்தில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலையில் பிரசித்திபெற்ற அறப்பளீஸ்வரர் கோயில், ஆகாய கங்கை நீர் வீழ்ச்சி, நம்ம அருவி, மாசிலா அருவி, போட் ஹவுஸ், வியூ பாயிண்ட், பொட்டானிக்கல் கார்டன் போன்றவை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகும். கொல்லிமலைக்கு செல்வதற்கு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுக்கா காரவள்ளியில் இருந்து 70 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். இந்த மலைப்பாதைய வழியாக பெரிய பஸ்கள் செல்ல முடியாது. சிறிய பஸ்கள், வேன்கள் மற்றும் கார்கள் மட்டுமே செல்ல முடியும். கொல்லிமலையின் சுற்றுலா வளர்ச்சிக்கு இந்த குறுகிய மலைப்பாதை பெரும் தடையாக உள்ளது. அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வருபவர்கள் இந்த மலைப்பாதையில் செல்வதற்கு மிகவும் விரும்புகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்து வழக்கமான பஸ்களில் சுற்றுலா வருபவர்கள் இங்கு செல்ல முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

சென்னை பகுதியில் இருந்து வருபவர்கள், தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய அனைத்து இயற்கை எழில்மிகு இடங்களுக்கும், வார இறுதியில் சென்று முகாமிட்டு மகிழ்ச்சி அடைவார்கள்.அவர்கள் கொல்லிமலைக்கு மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும் மட்டுமே வந்து செல்கின்றனர்.நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் மதிவேந்தன், தற்போது தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளதால், கொல்லிமலையை அகில இந்திய அளவில் சிறந்த சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இதையொட்டி கொல்லிமலையைப் பிரபலப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் இருந்து 350 கிமீ தொலைவில் அமைந்துள்ள கொல்லிமலை, 70 க்கும் மேற்பட்ட ஹேர்பின் வளைவுகளைக் கொண்ட மலைப்பாதை, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது. சென்னையில் இருந்து 6 மணி நேர பயணத்தில் கொல்லிமலையை அடைய முடியும். இங்குள்ள ஒரு சில தனியார் ரிசார்ட்டுகள் மலையேற்ற பயிற்சிக்கான ஏற்பாடு செய்கின்றன. இயற்கை எழில் கொஞ்சும் மலையாக இருந்த போதிலும், போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் இல்லாததால், இது போதுமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவில்லை. மூலிகை குணம் வாய்ந்ததாக கருதப்படும், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. மேலும், உடை மாற்றும் அறைகளோ அல்லது கழிப்பறைகளோ இல்லை. கொல்லிமலையின் பல இடங்களில், சமூக விரோதிகள் திறந்த வெளியில் அடிக்கடி மது அருந்துவதும் சுற்றுலாப்பயணிகளுக்கு அருவறுப்பை தருகிறது.

வருகிற 2023 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், அடுத்த 8 மாதங்களுக்குள், கொல்லிமலையை, மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்காகதமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மூலம் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இங்கு சுற்றுலா வசதிகளை மேம்படுத்த, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தற்போது ரூ.3 கோடி மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பில் சுற்றுச்சூழல் சுற்றுலா ரிசார்ட் அமைக்க திட்டமிட்டுள்ளது. இது கவர்ச்சியான முகாம் கூடாரங்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு உணவகம் மற்றும் கேம்ப் ஃபயர், ஜிப்லைன், ரோப் வாக்கிங் போன்ற சாகச விளையாட்டுகள் கொண்ட இடமாகவும் அமைய உள்ளது.

தமிழக சுற்றுலாத்துறையின் இத்தகைய முயற்சியால், கொல்லிமலை மேலும் வளர்ச்சி பெறும். ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு இணையாக கொல்லிமலையை மேம்படுத்த, தனியார் பங்களிப்புடன் சேர்ந்து, சர்வதேச தரத்திற்கு நிகராக ரோப் கார் வசதி, பல சாகச விளையாட்டு வசதிகள், பூங்காக்கள், இயற்கை குடில்கள் போன்றவற்றை அமைக்க வேண்டும். மேலும், கொல்லிமலைக்கு மாற்றுப்பாதையாக அமைக்கப்பட்ட முள்ளுக்குறிச்சி - நரியங்காடு மலைப்பாதையை மேலும் விரிவுபடுத்தி அனைத்து பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்றுவர வசதி செய்தால் இந்தியா முழுவதும் மட்டுமல்லாது,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கொல்லிமலைக்கு எளிதாக வந்து செல்வார்கள் என்று சுற்றுலா ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

Updated On: 26 Nov 2022 4:10 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்