நாமக்கல் அருகே கார் மோதி டூ வீலரில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு
Today Bike Accident News In Tamil- நாமக்கல் அருகே கார் மோதியதால் டூ வீலரில் சென்ற தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
HIGHLIGHTS
Today Bike Accident News In Tamil- திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகில் உள்ள கணபதிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (58). கூலித்தொழிலாளி. இவருடன், கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா கொள்ளம்பட்டியை சேர்ந்த காளியப்பன் மகன் வேலுச்சாமி (25) என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பொம்மம்பட்டிக்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்தனர். டூ வீலர் வேலுச்சாமி ஓட்டினார். புத்தூர் அருந்ததியர் காலனி அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த கார், டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் உயிரிழந்தார். வேலுச்சாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2