நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 23ல் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
Free Agriculture Training in India -நாமக்கல்லில் வரும் 23ம் தேதி, லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது.
HIGHLIGHTS
Free Agriculture Training in India - நாமக்கல்லில் வரும் 23ம் தேதி, லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது.
இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் (கேவிகே) தலைவர் தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 23ம் தேதி காலை 9 மணிக்கு, லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், வெள்ளாடு வளர்ப்பின் முக்கியத்துவம், வெள்ளாடு இனங்கள் மற்றும் அவற்றை தேர்வு செய்யும் முறைகள், கொட்டகை அமைக்கும் முறைகள், சரிவிகித தீவனம் அளித்தல், பசுந்தீவனம், உலர் மற்றும் கலப்புத்தீவனம் தயாரிக்கும் முறைகள், தீவனம், இனப்பெருக்கம் மற்றும் நோய் தடுப்பு மேலாண், கால அட்டவணைக்கு ஏற்ப தடுப்பூசி அளிக்கும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்படும்.
பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2