/* */

நாமக்கல்லில் வரும் 21-ம் தேதி குரூப் 2 தேர்வு: 31,859 பேர் பங்கேற்பு

நாமக்கல்லில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2 தேர்வினை 31,859 பேர் எழுத உள்ளனர்.

HIGHLIGHTS

நாமக்கல்லில் வரும் 21-ம் தேதி குரூப் 2 தேர்வு: 31,859 பேர் பங்கேற்பு
X

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (டி.என்.பி.எஸ்.சி) குரூப் 2, 2 ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு கடந்த பிப். 23ல் வெளியிடப்பட்டது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 5,529 பணியிடங்களை நிரப்பும் வகையில் நடக்கும் இத்தேர்வு வரும் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 17 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். இத்தேர்வுக்காக, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில், 105 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தாலுகாவில் 15,360 பேர், ராசிபுரத்தில் 8,576 பேர், திருச்செங்கோட்டில் 7,923 பேர், என மொத்தம் 31,859 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின் பேரில், தேர்வை கண்காணிப்பதற்காக 11 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. கருவூல அலுவலகங்களில் இருந்து, வினாத்தாள்களை எடுத்துச் செல்வதற்காக, தாசில்தார், துணை தாசில்தார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 30 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்புக்காக 30 துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். குரூப் 2 தேர்வு, காலை 9.30 மணி முதல், மதியம் 12.30 மணி வரை நடைபெறுகிறது. வருவாய்த்துறை அலுவலர்கள் தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகளை கவனித்து வருகின்றனர்.

Updated On: 19 May 2022 1:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தக்காளி, வெங்காயம் இல்லாத காரமான சட்னி செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு சாப்பிட வேண்டிய மீன்கள் என்னென்ன என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    "நம்பாதே யாரையும்" - மேற்கோள்களும் விளக்கமும்
  4. இந்தியா
    கடும் விமர்சனத்தைத் தூண்டிய தூர்தர்ஷனின் புதிய ஆரஞ்சு லோகோ
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு, மறுவாக்குப்பதிவு இல்லை: தேர்தல்...
  6. தென்காசி
    சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து...
  7. தொழில்நுட்பம்
    கையில் அடங்கும் புதிய அதிசயம் - Vivo V30e
  8. தொழில்நுட்பம்
    கலக்கும் Nothing Phone 2..! சூப்பர் அப்டேட் அப்பு..!
  9. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...