நீதிமன்ற வழக்கு தீர்வுக்குப்பின் கால்நடைத்துறையில் 1,500 பணியிடங்கள்: அமைச்சர்

நீதிமன்ற வழக்கிற்கு தீர்வு கண்ட பின், கால்நடை துறையில் 1,500 பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நீதிமன்ற வழக்கு தீர்வுக்குப்பின் கால்நடைத்துறையில்  1,500 பணியிடங்கள்: அமைச்சர்
X

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாமக்கல் வருகைதந்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், கோழிப்பண்ணைகளில், சிறு சிறு வேலைகளை மேற்கொள்ளும் வகையில், அலைடு பயிற்சி பெறும் வகையில், கால்நடை மருத்துவக்கல்லூரியில் பாடப்பிரிவுகள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதையொட்டி, இந்த ஆண்டிலேயே பல்வேறு சர்ட்டிபிகேட் கோர்ஸ் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆட்சியில், சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்பட்ட கால்நடை பூங்கா திட்டம், முந்தைய அரசு அவசர கோலத்தில் திறக்கப்பட்டது. அங்கு போதுமான தண்ணீர் வசதியில்லை. அங்கு தண்ணீர் தேவைக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டிய சூழ்நிலை உள்ளது. அந்த திட்டத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு கூட்டம் நடத்தி, தலைமை செயலர் தலைமையில், அந்த கல்லூரிக்கு தேவையான, திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தி உள்ளார். அவற்றை நடைமுறைப்படுத்த உள்ளோம்.

கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசிக்கு தற்போது தட்டுப்பாடு இல்லை. மத்திய அரசுதான் கோமாரி தடுப்பூசி தரவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான கோமாரி தடுப்பூசி ஒட்டு மொத்தமாக பெறப்பட்டுள்ளது. கால்நடை துறையில் காலியாக உள்ள 1,500 பணியிடங்கள் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் உரிய தீர்வு கண்ட பின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். இலங்கை அரசால், தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்பாக, மத்திய அரசிடம் கடிதம் மூலமாக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என அவர் தெரிவித்தார்.

Updated On: 8 March 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    “ஏற்காடு எங்கள் பெருமை” விழிப்புணர்வு நடைப்பயணம்: எம்எல்ஏ, ஆட்சியர்...
  2. லைஃப்ஸ்டைல்
    Betrayal quotes in tamil-துரோகித்து வெல்வதைவிட நேர்மையாக தோற்பது...
  3. தமிழ்நாடு
    mavattam in tamilnadu தமிழக மாவட்டங்களின் சிறப்பு பற்றி தெரியுமா...
  4. ஈரோடு
    காஞ்சிக்கோவில், மயிலம்பாடி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
  5. லைஃப்ஸ்டைல்
    Mulam in tamil-'சாண் ஏறுனா முழம் சறுக்குது' இதில் முழம் என்பது என்ன?...
  6. இந்தியா
    ரயில் விபத்துகளில் உயிரிழந்தோரின் நிவாரணத்தொகை உயர்வு
  7. தமிழ்நாடு
    இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை:முதல்வர் ...
  8. தர்மபுரி
    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு மாநகரம்
    சப்பாத்தியில் பூச்சி, ஈரோட்டில் உணவகம் மூடல்
  10. ஈரோடு மாநகரம்
    கனி மார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகள் அமைக்கும் பணி தொடக்கம்