10ம் வகுப்பு பொதுத்தேர்வு: அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் மையம்

நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் 1,731 அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
10ம் வகுப்பு பொதுத்தேர்வு:  அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் மையம்
X

நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறை கண்காணிப்பு பணியில் ஈடுபடுபவர்களை, மாவட்ட கல்வி அலுவலர் குலுக்கல் மூலம் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் 1,731 அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 6ம் தேதி முதல் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதற்காக மாவட்டம் முழுவதும் 94 பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

தேர்வு பணியில் 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள், 1,731 அறை கண்காணிப்பாளர்கள், 140 பறக்கும் படையினர், 9 கட்டுகாப்பு மைய அலுவலர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 69 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தநிலையில் அறை கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

மாவட்ட கல்வி அலுவலர் ரவி கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுத் தேர்வை சிறப்பான முறையில் நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள், துறை அலுவலர்கள், செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மாணவர்களும், செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை முதன்மை கண்காணிப்பாளர்கள் வாழ்த்தி அனுப்ப வேண்டும்.

துண்டு சீட்டு (பிட்) வைத்து தேர்வு எழுதுவதை தவிர்த்து, நேர்மையான முறையில் தேர்வு எழுத மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அறை கண்காணிப்பாளர்கள் பணியாற்றும் மையங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூட்டத்தில், பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் பெரியசாமி, கண்காணிப்பாளர் விக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 March 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கோவையில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு
  2. உடுமலைப்பேட்டை
    உடுமலை; அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகள்...
  3. சினிமா
    கீர்த்தி சுரேஷ் கடகடவென 20 கிலோ எடை குறைத்தது எப்படி? இப்படித்தானாம்!
  4. திருச்செந்தூர்
    திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை...
  5. சினிமா
    எதிர்நீச்சலில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்! அய்யய்யோ இவரா இவரு...
  6. தமிழ்நாடு
    வருங்கால வைப்பு நிதி அதிக ஓய்வூதியம்: விண்ணப்பிக்க காலக்கெடு...
  7. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வு: மனுக்கள்...
  8. திருப்பூர்
    திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க, கலெக்டர் அறிவுறுத்தல்
  9. தமிழ்நாடு
    புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 கிலோ கேக் வெட்டி கருணாநிதி பிறந்த நாள் விழா