/* */

வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் விஷம் குடித்தனர் - ஒருவர் பலி

குமாரபாளையத்தில், வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் விஷம் குடித்ததில், ஒரு பெண் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் விஷம் குடித்தனர் - ஒருவர் பலி
X

குமாரபாளையம் நாராயணநகரில் வசிப்பவர் லட்சுமி, 38. ராஜா வீதியில் வசிப்பவர் சீனிவாசன், 42, அருவங்காடு பகுதியில் வசிப்பவர் ராமசாமி, 55. இவர்கள் மூவரும் பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக எலிகளை கொல்ல பயன்படுத்தும் விஷமருந்தியதாக கூறபடுகிறது. நேற்று இவர்கள் காலை 10:00 மணி முதல், மூவரும் அடுத்தடுத்து சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவர்கள் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 09:00 மணியளவில் லட்சுமி இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழில்நிலை பின்னடைவு, குடும்ப பிரச்சனை, கடன் சுமை உள்ளிட்ட பல பிரச்சனை காரணமாக இது போன்ற தற்கொலை சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்தினர், இது குறித்து பரிசீலித்து அந்தந்த பகுதி ஆசிரியர்களை கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 25 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  2. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  3. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  9. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  10. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...